




desertcart.com: Manju (M.T): M.T.Vasudevan Nair: Books Review: classic novel by MT Review: Nice
| ASIN | B007E4X7KA |
| Best Sellers Rank | #4,320,809 in Books ( See Top 100 in Books ) |
| Customer Reviews | 4.5 4.5 out of 5 stars (478) |
| Dimensions | 9.21 x 6.14 x 0.39 inches |
| Item Weight | 3.53 ounces |
| Language | Malayalam |
| Publication date | January 1, 1964 |
| Publisher | Current Books |
R**H
B**K
classic novel by MT
S**S
Nice
S**N
மஞ்சு அல்லது மஞ்ஞு வா என்ற சந்தேகம். மஞ்சு வியாபார உத்தியாக இருக்கலாம் தவறில்லை. மொழி பெயர்ப்பில் தலைப்பு பெயர் மஞ்சு ஆகவே தொடரட்டும் என விட்டிருக்கிறார்கள். மஞ்ஞு என்றால் மூடுபனி என்ற மொழிபெயர்க்கலாம். மொழிபெயர்ப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் சில இடங்களில் வார்த்தைகள் முடியாமலே நின்று தாவி விடுகின்றன. மலையாளத்தில் பெரும் பெயர் கொண்ட எம்.டி வாசுதேவன் நாயரால் 1964 ல் எழுதப் பட்ட குறுங்கதை. ( கதைகளுக்கான விதிகளும் அளவுகளும் பரிச்சயமில்லை எனக்கு) இக்கதைக்கான வேறு மொழிப்பெயர்ப்புகள் இருந்தாலும் 2017 இன்றைய நடைக்கேற்ப மீண்டும் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. கதையின் கரு மனித மனத்தின் தீராப்பசியான எதிர்பார்ப்பை மையம் கொண்டே அமைந்திருக்கிறது. கதையின் களம் தற்போதைய உத்தரகாண்ட் மையமாக கொண்ட நைனிடால் பகுதியை சுற்றியே நகர்கிறது. கதையின் முக்கிய மாந்தர்களாக விமலா தேவியும், சர்தார்ஜியும், புத்துவும், விமலாவின் தந்தையுமே, நால்வருக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றாலும் நால்வரும் எதிர்பார்ப்பு என்ற உணர்வில் ஒரே புள்ளியில் இணைந்து விடுகிறார்கள். கதை மாந்தர்களுக்கு வெளி உறவுகளின் மேல் கொண்ட பெரும் பிடிப்பு இரத்த உறவுகளின் மேல் அமையவில்லை இரத்த உறவுகளுக்குள்ளான ஒழுங்கீனமும் விமலாவின் குடும்பத்தில் தந்தையின் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை, வரம்பைத் தாண்ட தூண்டி நிச்சயமற்ற பெரு வெளிகளை திறந்து விடுகிறது. . மூடுபனி வழி எந்த பொருளையும் பார்ப்பது எளிதல்ல. ஆனால் அதற்கு பின் உள்ள பொருட்கள் உண்மையே. கதை மாந்தர்களின் வழியும் அப்படித்தான் விமலாவின் தந்தையின் குடும்ப அமைப்பிற்கான எதிர்பார்ப்பும்,, தன் காதலனை எதிர்பார்த்து காத்திருக்கும் விமலாவும், பிறக்கும் முன்னே விட்டுப் போன புத்துவின் தந்தை தேடலும், சர்தார்ஜி எதிர்பார்க்கும் இறப்பும் உண்மை மஞ்தான் ஆனால் அது வருவதற்கான காலமோ ஒரு நிச்சயமற்ற மூடுபனியாகவே இருக்கிறது. உறுதியான பொருளதார பிடிமானம் கடவுள் நம்பிக்கைகளை உதாசீனப்படுத்த தோன்றி விடுவது கள யதார்த்தமாகி விடுகிறது. விமலாவின் நம்பிகையற்ற பெருவழியை.புத்து, சர்தார்ஜி கதபாத்திரங்கள் வழி மூடுபனியை போல தோன்றி எதிர்பார்ப்பிறகான மூலத்தையும் நம்பிக்கை வித்தையும் விதைத்து விட்டு போகிறார்கள்.
A**R
Good one
Trustpilot
2 months ago
3 weeks ago
2 weeks ago
2 weeks ago